திருக்குறள்

660.

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

திருக்குறள் 660

சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

பொருள்:

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

மு.வரததாசனார் உரை:

வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.